கொலோசெயர் விளக்கவுரை (Koloseyar Vilakkavurai)

40.00

அப்போஸ்தலனாகிய பவுல் ரோம் நகரில் சிறையில் இருந்தாலும் கொலோசெவிலுள்ள விசுவாசிகளைக் குறித்து கரிசனை உள்ளவராக இக்கடிதத்தை எ\ழுதி அனுப்புகிறார். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிந்து விசுவாசிகளானாலும் காலப்போக்கில் பிற மதத்தினரின் தத்துவங்களை சுவிசேஷ உபதேசத்திற்குள் உட்புக அனுமதித்து விட்டனர். அதன் விளைவாக குறிப்பாக கிரேக்கர்களின் அறிவை முதன்மை படுத்துகிற ஞானமார்க்கம் உட்புகுந்தது. கிறிஸ்துவின் தியாக சிலுவை மரணத்தையும் அதன் மூலம் அவர் அருளிய ரட்சிப்பை மறுதலிக்கிற நிலவரத்தை எட்டினார்கள். இந்த மாற்றத்தை சீர்படுத்தவே பவுல் இக்கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைப் பற்றிய முழு குறிப்புகளையும் இப்புத்தகத்தில் காணலாம்.

Share
Weight 048 kg
Dimensions 14 × 0.3 × 21.3 in

You may also like…